Showing posts with label மழை. Show all posts
Showing posts with label மழை. Show all posts

Wednesday, June 9, 2010

........

பட்டென மின்னி
சட்டென கொட்டி
பழையவை துலக்கி
பல இடைவெளிகள் நிரப்பி
பாடி களித்து
ஆடி குதித்து
வாரி சுருட்டி
இழுத்து கடல் சென்றடைகிறாய் …
என்னில் சில இழந்து
சில இடம்பெயர்ந்து
மௌனமாய் நிற்கிறேன் …
வந்தால் கதை சொல்ல
ஆழத்தில்
எஞ்சி நிற்கிறது
நீ விட்டு சென்ற ஈரம் …

Sunday, May 16, 2010

மழை

இதுவரை
உக்கிரமாய்
இருந்த கணங்களை
சொல்லிவிட்டுப்போனது
நேற்றிரவு
அடித்துப் பெய்த மழை...