Wednesday, June 9, 2010

........

பட்டென மின்னி
சட்டென கொட்டி
பழையவை துலக்கி
பல இடைவெளிகள் நிரப்பி
பாடி களித்து
ஆடி குதித்து
வாரி சுருட்டி
இழுத்து கடல் சென்றடைகிறாய் …
என்னில் சில இழந்து
சில இடம்பெயர்ந்து
மௌனமாய் நிற்கிறேன் …
வந்தால் கதை சொல்ல
ஆழத்தில்
எஞ்சி நிற்கிறது
நீ விட்டு சென்ற ஈரம் …

4 comments:

Unknown said...

Vaazthukkal Romba nalla irukku

Aditi said...

நன்றி பிரகாஷ் :) :) :) :) :)

ஸ்வரூப் said...

ஊற்றெடுக்கட்டும் கதைகள்

gowri said...

Kavithai romba arumaiya irukku dear...kathirukkeren aduthu nee solla pogum kathaikkaka.....